tamilni 380 scaled
இலங்கைசெய்திகள்

ஏழு கடற்றொழிலாளர்களுக்கு மரண தண்டனை

Share

ஏழு கடற்றொழிலாளர்களுக்கு மரண தண்டனை

12 வருடங்களுக்கு முன் மீன்பிடி படகை கடத்தி மூன்று கடற்றொழிலாளர்களை கொன்ற வழக்கில் 7 கடற்றொழிலாளர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இன்று (24.12.2024) ஆதித்ய படபாண்டிகே இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த (15.10.2012) அன்று இலங்கைக் கடற்பகுதியில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டவர்களை ஏற்றிச் சென்ற ‘தேஜான்’ என்ற படகை கடத்தி மூன்று கடற்றொழிலாளர்கள் மற்றும் பல கடற்றொழிலாளர்களை குறித்த 7 கடற்றொழிலாளர்கள் கடுமையாகக் காயப்படுத்தியுள்ளனர்.

மேலும் படகை கடத்தி அவுஸ்திரேலியா அனுப்பிவைத்துள்ளனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 11 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

அவர்களில் மூவர் வழக்கு விசாரணையின் போது இறந்ததால், குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் நடத்தப்பட்டன.

இந்த வழக்கில் 10வது குற்றவாளியாக குறிப்பிடப்பட்டிருந்த சந்தேகநபரை விடுதலை செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்ட நிலையில் மீதமிருந்த ஏழு குற்றவாளிகளும் இந்த தண்டனையை விதித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...