நாட்டை விட்டு வெளியேறியுள்ள 2000 விரிவுரையாளர்கள்
இலங்கைசெய்திகள்

நாட்டை விட்டு வெளியேறியுள்ள 2000 விரிவுரையாளர்கள்

Share

நாட்டை விட்டு வெளியேறியுள்ள 2000 விரிவுரையாளர்கள்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் (UGC) பதிவு செய்யப்பட்ட தரவுகளின்படி, கடந்த ஒன்றரை வருடங்களில் கிட்டத்தட்ட 2,000 விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர், இதில் கடந்த 6 மாதங்களில் 600 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் எ‌ன்று‌ பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA), தலைவர் பேராசிரியர் பரண ஜயவர்தன தெரிவித்தார்.

நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் 11,900 விரிவுரையாளர்கள் இருக்க வேண்டும், ஆனால் தற்போது,600 பேர் மட்டுமே உள்ளனர்.

பெ ரும்பாலான விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி நாடு திரும்பவில்லை.அவர்களில் பெரும்பாலோர் சேவையை விட்டு வெளியேறியதாக அந்தந்த பல்கலைக்கழகங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“2017 ஆம் ஆண்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் 30,000 புதிய மாணவர் சேர்க்கைகள் மட்டுமே நடந்துள்ளன. பின்னர், 2021 இல் 34,000 ஆக அதிகரிக்கப்பட்டது, இது 2017 உடன் ஒப்பிடும்போது 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

எனினும் துரதிர்ஷ்டவசமாக,புதிய விரிவுரையாளர் நியமனங்களின் எண்ணிக்கை 2017 க்குப் பிறகு அதிகரிக்கவில்லை என பேராசிரியர் ஜெயவர்தன தெரிவித்தார்.

மேலும், விரிவுரையாளர்களுக்கு சில நிவாரணங்களை வழங்குவதாக கடந்த மார்ச் மாதம் அரசாங்கம் உறுதியளித்த போதிலும் இதுவரையில் எதுவும் நடக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

துரதிஷ்டவசமாக பொருளாதார வீழ்ச்சி காரணமாக புதிய விரிவுரையாளர்களை நியமிப்பதை அரசாங்கம் நிறுத்தியுள்ளது.

இந்தநிலையில் கடந்த 6 மாதங்களில் நாட்டை விட்டு வெளியேறிய விரிவுரையாளர்களுக்கு பதிலாக புதிய நியமனங்களை வழங்குமாறு ஜனாதிபதி அந்தந்த அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், விரிவுரையாளர்களை ஏற்கனவே உள்ள தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வெளிநாட்டு பயிற்சி தேவை.

அவர்களுக்கு வெளிநாட்டு பயிற்சி அளிக்கப்பட்டால், அவர்கள் நாடு திரும்புவது சந்தேகம் என்றும் பேராசிரியர் ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1532860700 Two police officers arrested over assaulting two youths B
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் பதற்றம்: இளைஞர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் – இருவர் படுகாயம்!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி காவல் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதோடு,...

22 62a8366eaa932
செய்திகள்இலங்கை

பெண் அரச ஊழியர்களுக்கு Work From Home வசதி? – அமைச்சரவை மட்டத்தில் தீவிர ஆலோசனை!

இலங்கையில் பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் புதிய முன்மொழிவு குறித்து மகளிர் விவகார...

download 1 1
செய்திகள்விளையாட்டு

LA 2028 ஒலிம்பிக்: வெறும் 28 டொலர்களுக்கு நுழைவுச்சீட்டு – முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்!

2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு முன்பதிவு...