நாட்டை விட்டு வெளியேறியுள்ள 2000 விரிவுரையாளர்கள்
இலங்கைசெய்திகள்

நாட்டை விட்டு வெளியேறியுள்ள 2000 விரிவுரையாளர்கள்

Share

நாட்டை விட்டு வெளியேறியுள்ள 2000 விரிவுரையாளர்கள்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் (UGC) பதிவு செய்யப்பட்ட தரவுகளின்படி, கடந்த ஒன்றரை வருடங்களில் கிட்டத்தட்ட 2,000 விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர், இதில் கடந்த 6 மாதங்களில் 600 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் எ‌ன்று‌ பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA), தலைவர் பேராசிரியர் பரண ஜயவர்தன தெரிவித்தார்.

நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் 11,900 விரிவுரையாளர்கள் இருக்க வேண்டும், ஆனால் தற்போது,600 பேர் மட்டுமே உள்ளனர்.

பெ ரும்பாலான விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி நாடு திரும்பவில்லை.அவர்களில் பெரும்பாலோர் சேவையை விட்டு வெளியேறியதாக அந்தந்த பல்கலைக்கழகங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“2017 ஆம் ஆண்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் 30,000 புதிய மாணவர் சேர்க்கைகள் மட்டுமே நடந்துள்ளன. பின்னர், 2021 இல் 34,000 ஆக அதிகரிக்கப்பட்டது, இது 2017 உடன் ஒப்பிடும்போது 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

எனினும் துரதிர்ஷ்டவசமாக,புதிய விரிவுரையாளர் நியமனங்களின் எண்ணிக்கை 2017 க்குப் பிறகு அதிகரிக்கவில்லை என பேராசிரியர் ஜெயவர்தன தெரிவித்தார்.

மேலும், விரிவுரையாளர்களுக்கு சில நிவாரணங்களை வழங்குவதாக கடந்த மார்ச் மாதம் அரசாங்கம் உறுதியளித்த போதிலும் இதுவரையில் எதுவும் நடக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

துரதிஷ்டவசமாக பொருளாதார வீழ்ச்சி காரணமாக புதிய விரிவுரையாளர்களை நியமிப்பதை அரசாங்கம் நிறுத்தியுள்ளது.

இந்தநிலையில் கடந்த 6 மாதங்களில் நாட்டை விட்டு வெளியேறிய விரிவுரையாளர்களுக்கு பதிலாக புதிய நியமனங்களை வழங்குமாறு ஜனாதிபதி அந்தந்த அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், விரிவுரையாளர்களை ஏற்கனவே உள்ள தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வெளிநாட்டு பயிற்சி தேவை.

அவர்களுக்கு வெளிநாட்டு பயிற்சி அளிக்கப்பட்டால், அவர்கள் நாடு திரும்புவது சந்தேகம் என்றும் பேராசிரியர் ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...