4 4
இலங்கைசெய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட 200 சொகுசு வாகனங்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

Share

இறக்குமதி செய்யப்பட்ட 200 சொகுசு வாகனங்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 200 சொகுசு வாகனங்களில் 20 வாகனங்கள் மட்டுமே அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களினால் அரசாங்கத்திற்கு 500 கோடி ரூபாவுக்கும் அதிகமான வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படும் வகையில் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனங்களை உடனடியாக கைப்பற்றுவதோடு குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்யுமாறு பிரதம நீதவான் திலின கமகே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை சுங்கத்திற்கு கடத்தப்பட்ட பிராடோ, லேண்ட் க்ரஷர், வி8, ரேஞ்ச் ரோவர் உள்ளிட்ட 200 சொகுசு வாகனங்கள், சாதாரண வாகனங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சொகுசு வாகனங்களை உடனடியாக அரசிடம் ஒப்படைக்குமாறு உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Share
தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...