20 26
இலங்கைசெய்திகள்

கொழும்பு- பதுளை தொடருந்து பயணிகளால் மாதந்தோறும் குவியும் கழிவுகள்

Share

கொழும்பு- பதுளை தொடருந்து பயணிகளால் மாதந்தோறும் குவியும் கழிவுகள்

கொழும்புக்கும் (colombo)பதுளைக்கும்(badulla)இடையில் ஓடும் தொடருந்துகளில் இருந்து மாதந்தோறும் சுமார் 20,000 வெற்று கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் போத்தல்கள் சேகரிக்கப்படுவதாக தொடருந்து நிலைய ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் தொடருந்தில் பயணிக்கும் பயணிகள் தாம் பயன்படுத்திய பிறகு, இருக்கைகள் மற்றும் பிற இடங்களில் வெற்று பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி போத்தல்களை விடுகின்றனர்.

இவ்வாறு விடப்படும் போத்தல்களை பதுளை தொடருந்து நிலைய ஊழியர்கள் தொடருந்து நிலையத்தில் பாதுகாப்பாக சேகரித்து வெளி நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது.

வெற்று தண்ணீர் போத்தல்கள், பீர் கான்கள் மற்றும் மது போத்தல்கள் ஆகியவை பெரும்பாலும் அப்புறப்படுத்தப்படும் பொருட்களில் அடங்கும் என்றும், பயணிகள் ஓடும் தொடருந்துக்கு வெளியே கழிவுகளை வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...