25 683cf291ebc9e
இலங்கைசெய்திகள்

கோவிட் தொடர்பில் வெளியிடப்படவுள்ள இரண்டு சுற்று நிருபங்கள்

Share

கோவிட் தொற்று பரவுகை தொடர்பில் இரண்டு சுற்று நிருபங்கள் வெளியிடப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கோவிட் தொற்று பரவுகை தொடர்பில் வெளியாகி வரும் தகவல்களின் அடிப்படையில் இந்த சுற்று நிருபங்கள் வெளியிடப்பட உள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்காக ஒரு சுற்று நிருபமும் சுகாதாரப் பணியாளர்களுக்காக மற்றுமொரு சுற்று நிருபமும் வெளியிடப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரண்டு சுற்று நிருபங்களை வெளியிடுவது குறித்து உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆசிய பிராந்திய வலய நாடுகளில் இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் கோவிட் தொற்று பரவுகையை அவதானிக்க முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் இலங்கையில் கண்டறியப்பட்ட கோவிட் புதிய உப திரிபு தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

எவ்வாறெனினும், ஆபத்துக்களை எதிர்நோக்கக் கூடிய கர்பிணிகள், வயோதிபர்கள் மற்றும் நாட்பட்ட நோயாளிகள் முகக் கவசங்களை அணிந்து கொள்ள வேண்டுமெனவும், மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...