அக்கரைப்பற்று, இறக்காமம் – வாங்காமம் பகுதியிலுள்ள ஆறு ஒன்றில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
நேற்று பிற்பகல் குறித்த ஆற்றில் நீராடச் சென்ற 2 சிறுவர்களும், நீரில் இழுத்துச் செல்லப்பட்டதை அடுத்து, பிரதேசவாசிகள் அவர்களை மீட்டு அக்கரைப்பற்று வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
இந்தநிலையில், அவர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று மருத்துவமனை அறிக்கையை மேற்கோள்காட்டி பொலிஸ் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியும், 6 வயது சிறுவனும் இதன்போது உயிரிழந்தனர்.
சம்பவம் தொடர்பில் இறக்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment