11 23
இலங்கைசெய்திகள்

யாழில் அரச பேருந்து ஊழியர்களைத் தாக்கிய நபர் கைது

Share

யாழில் அரச பேருந்து ஊழியர்களைத் தாக்கிய நபர் கைது

யாழ்ப்பாணம் (Jaffna) பேருந்து நிலையத்திற்குள் புகுந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான காரைநகர் சாலை பேருந்தின் சாரதி மற்றும் யாழ். சாலை நடத்துநர் மீது தாக்குதலை நடத்தி தப்பியோடிய இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்குள் நேற்றுமுன்தினம் (24.12.2024) மாலை நுழைந்த இருவர் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்றையதினம் (25.12.2024), அரச போக்குவரத்து துறையில் கடமையில் ஈடுபடும் யாழ் – காரைநகர் ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதுடன் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனுடனும் (R.Chandrasekar) இது குறித்து கலந்துரையாடலை முன்னெடுத்தனர்.

இவ்வாறான பின்னணியில் இந்த சம்பவம் குறித்து விரைந்து நடவடிக்கைகளை எடுக்குமாறு, கடற்றொழில் அமைச்சர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர் வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் குறித்த வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு 1 மணிக்கு பின்னர் கைவிடப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில் தாக்குதல் நடத்திய ஒருவர் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றையவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...