13 10
இலங்கைசெய்திகள்

யாழில் அநுரவின் பெயரில் நடந்த மோசடி: யாழ். நெல்லியடியில் சிக்கிய மதபோதகர்

Share

யாழ்ப்பாணம் (Jaffna) – நெல்லியடிப் பகுதியில் தேசிய மக்கள் சக்தி (NPP) மற்றும் அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) பெயரைப் பயன்படுத்தி நிதிசேகரிப்பில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என தன்னை அறிமுகப்படுத்திய மதபோதகர் ஒருவரும் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், “கடந்த ஒரு வாரகாலமாக தேசிய மக்கள் சக்தியினையும் அநுரகுமார திசாநாயக்கவின் பெயரையும் பயன்படுத்தி தம்மை மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என அறிமுகப்படுத்தி குறித்த இருவரும் நிதிசேகரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

நேற்று நெல்லியடி நகரில் நிதி சேகரிப்பில் ஈடுபட்ட போது நிதி வழங்க மறுத்தவர்களை அநுரவின் பெயரைக் கூறி ஒளிப்படத்தைக் காண்பித்து அச்சுறுத்தி நிதியை வலுக்கட்டாயமாக பெற முற்பட்ட போது வர்த்தகர்களுக்கும் அவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு கூடிய வர்த்தகர்கள் குறித்த நபர்களை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்க்கொண்டு நெல்லியடி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் காவல் நிலையத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் குறித்த நபர்களை கடுமையாக எச்சரித்து விட்டு விடுவித்துள்ளனர்.

நிதிசேகரிப்பில் ஈடுபட்ட மதபோதகர் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என்று தன்னை அறிமுகப்படுத்தியதுடன் சிறுவர்களைப் பராமரிப்பதற்காகவே இந்த நிதியை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். எனினும் அதற்கான பற்றுச் சீட்டுக்கள் எவற்றையும் வழங்கவில்லை.

இதேவேளை நிதி கொடுக்க மறுத்தவர்களை எலிக்காய்ச்சல் வந்து இறப்பாய் என்றும், அநுரவை நான் தான் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்தேன் எனவும் அநுர ஆட்களைப் பற்றித் தெரியும் தானே என அச்சுறுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் குறித்த மதபோதகர் கடந்த காலங்களில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) பிரசார மேடைகளில் ஆசியுரைகளை கூறியதுடன் அநுர அரசுக்கு ஆதரவு கோரி ஆசியுரைகளை வழங்கி வந்தவர் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
23 6463b66b7e2da
அரசியல்இலங்கைசெய்திகள்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் சஜித் பிரேமதாச போட்டி: சுஜீவ சேனசிங்க உத்தியோகபூர்வமாக உறுதி!

இலங்கையின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் போட்டியிடுவார் என்பதை ஐக்கிய...

24 663887579e266
இந்தியாசெய்திகள்

மது அருந்தப் பணம் இல்லாததால் 2 மாதக் குழந்தையை ரூ. 2.4 லட்சத்திற்கு விற்பனை செய்த தாய்: ஐதராபாத்தில் அதிர்ச்சி!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான தாய் ஒருவர், மது வாங்கப்...

IMG 20251217 WA0029 696x392 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஊழல் குற்றச்சாட்டு: கிளிநொச்சி மாசார் அ.த.க. பாடசாலை அதிபருக்கு எதிராகப் பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் போராட்டம்!

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி மாசார் அ.த.க. பாடசாலையின் அதிபர் த.ஜெபதாஸ் மேற்கொண்டு வரும் நிதி முறைகேடுகள் மற்றும்...

ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...