11 10
இலங்கைசெய்திகள்

ரணில் அரசின் 18 அமைச்சர்களுக்கு ஏற்படப்போகும் சிக்கல்

Share

ரணில் அரசின் 18 அமைச்சர்களுக்கு ஏற்படப்போகும் சிக்கல்

அரச வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து விநியோகித்தமை தொடர்பில் கடந்த ரணில்(ranil) அரசாங்கத்தின் 18 அமைச்சரவை அமைச்சர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மருந்துகள் தேவையான பாதுகாப்பு மற்றும் உரிய தரங்களை பூர்த்தி செய்யவில்லை என்று கூறப்பட்டதைத் தொடர்ந்து, இந்த மருந்துகளின் கொள்முதல் மற்றும் விநியோகம் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த மருந்துகளை கொள்வனவு செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் அனுமதி வழங்கிய அமைச்சரவையில் குறித்த அமைச்சர்கள் அங்கம் வகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்த தரமற்ற கொள்முதல் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் நீண்ட நாட்கள் சிறையிருந்த நிலையில் தற்போதுதான் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....