12 9
இலங்கைசெய்திகள்

டிசம்பரில் வெளிவரவுள்ள நற்செய்தி: ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்

Share

டிசம்பரில் வெளிவரவுள்ள நற்செய்தி: ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்

கடன் மறுசீரமைப்பு பணிகள் டிசெம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கான கம்பஹாவில் நேற்று (11) இடம்பெற்ற இறுதி தேர்தல் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, கடன் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க ஸ்திரத்தன்மையை அடைய முடியும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், டிசம்பரில், அடுத்த நான்கு மாதங்களுக்கான துணை மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நாடு புதிய பொருளாதார திசைக்கு கொண்டு செல்லப்படும்.

ஓய்வூதியர்களின் கொடுப்பனவு ஏற்கனவே ரூ.3000 உயர்த்தியுள்ளோம். இழப்பீடு பெறுவதற்கு வேறு குழு உள்ளதா என பரிசீலனை செய்யப்படுகிறது.

அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் வருமானம் ஈட்டும்போது வரி நியாயமான விலக்குக்குக் கொண்டுவரப்படும் என்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...