11 10
இலங்கைசெய்திகள்

ரணில் அரசின் 18 அமைச்சர்களுக்கு ஏற்படப்போகும் சிக்கல்

Share

ரணில் அரசின் 18 அமைச்சர்களுக்கு ஏற்படப்போகும் சிக்கல்

அரச வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து விநியோகித்தமை தொடர்பில் கடந்த ரணில்(ranil) அரசாங்கத்தின் 18 அமைச்சரவை அமைச்சர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மருந்துகள் தேவையான பாதுகாப்பு மற்றும் உரிய தரங்களை பூர்த்தி செய்யவில்லை என்று கூறப்பட்டதைத் தொடர்ந்து, இந்த மருந்துகளின் கொள்முதல் மற்றும் விநியோகம் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த மருந்துகளை கொள்வனவு செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் அனுமதி வழங்கிய அமைச்சரவையில் குறித்த அமைச்சர்கள் அங்கம் வகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்த தரமற்ற கொள்முதல் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் நீண்ட நாட்கள் சிறையிருந்த நிலையில் தற்போதுதான் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 23
செய்திகள்இலங்கை

கொட்டாஞ்சேனைக் கொலைச் சம்பவம்: ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் துப்பாக்கிதாரி கைது – 72 மணி நேர தடுப்புக் காவலில் விசாரணை!

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி, ‘ஐஸ்’...

image 17
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் அதிரடி உயர்வு: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் (Driving License) வழங்குவதற்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து,...

MediaFile 14
செய்திகள்இலங்கை

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.00 –...

20250719 124156
செய்திகள்இலங்கை

இந்திய முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு: சுற்றுலா மற்றும் திரைப்படத் திட்டங்களில் ஒத்துழைக்க விஜித ஹேரத் வலியுறுத்தல்!

நாட்டில் புதிய சுற்றுலா முயற்சிகள் மற்றும் திரைப்படத் திட்டங்களை ஆராய்வதற்காக இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் திரைப்படத்...