24 6621a17cbc52c
இலங்கைசெய்திகள்

சிறைச்சாலைகளில் நிரம்பி வழியும் கைதிகள்

Share

சிறைச்சாலைகளில் நிரம்பி வழியும் கைதிகள்

நாட்டின் சிறைச்சாலைகளில் அடைக்கப்படக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 11,000 என்ற போதிலும் தற்போது 29,800 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை சுமார் பதினெட்டாயிரத்தால் அதிகரித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசல் காரணமாக கைதிகள் பலர் மாறி மாறி உறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கையில், ​​

இந்த கடுமையான நிலைக்கு மாற்றாக கொழும்பு சிறைச்சாலைகளில் உள்ள சில கைதிகள் ஹொரணை பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பூசா கைதிகள் பல்லசேன முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் சுமார் 670 கைதிகளை அடைத்து வைக்க முடியும் எனவும், தற்போது 2000க்கும் அதிகமான கைதிகள் அங்கு இருப்பதாகவும் சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலையில் 300 கைதிகள் இருக்க முடியும் ஆனால் 2000க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். மஹர சிறைச்சாலைகளில் 670 கைதிகளுக்கான வசதிகள் இருந்த போதிலும் 2500க்கும் மேற்பட்ட கைதிகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

காலி சிறைச்சாலையில் 270 கைதிகள் உள்ள போதிலும் 1100 கைதிகள் இருப்பதாக காலி சிறைச்சாலை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...