mahintha.jpgg
அரசியல்இலங்கைசெய்திகள்

மஹிந்த உட்பட 17 பேருக்கு வெளிநாடு செல்லத் தடை! – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Share

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட 17 பேருக்கு வெளிநாடு செல்லத் தடை விதித்து கொழும்பு கோட்டை நீதிவான் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 9ஆம் திகதி கொழும்பு – காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகை முன்பாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினரால் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த கோட்டை நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

முன்னாள் அமைச்சர்களான நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க மற்றும் சனத் நிஷாந்த ஆகியோரும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலில் உள்ளடங்குகின்றனர்.

மேலும், மேல் மாகாணத்துக்கும் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கும் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...