அரசியல்இலங்கைசெய்திகள்

மஹிந்த உட்பட 17 பேருக்கு வெளிநாடு செல்லத் தடை! – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

mahintha.jpgg
Share

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட 17 பேருக்கு வெளிநாடு செல்லத் தடை விதித்து கொழும்பு கோட்டை நீதிவான் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 9ஆம் திகதி கொழும்பு – காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகை முன்பாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினரால் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த கோட்டை நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

முன்னாள் அமைச்சர்களான நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க மற்றும் சனத் நிஷாந்த ஆகியோரும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலில் உள்ளடங்குகின்றனர்.

மேலும், மேல் மாகாணத்துக்கும் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கும் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...