tamilni 529 scaled
இலங்கைசெய்திகள்

நீர்கொழும்பில் சிறுமி ஒருவருக்கு மற்றுமொரு பெண்ணால் மோசமான அனுபவம்

Share

நீர்கொழும்பில் சிறுமி ஒருவருக்கு மற்றுமொரு பெண்ணால் மோசமான அனுபவம்

நீர்கொழும்பில் சிறுமி ஒருவரை தவறான செயலுக்கு உட்படுத்திய விவகாரம் தொடர்பில் 17 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

நீர்கொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள மசாஜ் நிலையமொன்றுக்கு அழைத்து சென்று அந்த சிறுமி தவறான செயலுக்கு உட்படுத்தபட்டுள்ளார்.

சந்தேகநபரான 17 வயது யுவதி , சிறுமியின் தாய் வீட்டில் இல்லாதபோது சிறுமியின் காதலனை சந்திக்க அழைத்து செல்வதாக கூறி சிறுமியை நீர்கொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் சிறுமி குறித்த யுவதியிடம் கேட்டபோது, இது மசாஜ் நிலையம் என அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் இருவரும் மசாஜ் நிலையத்தில் இருந்து திரும்பிய நிலையில் காதலனை சந்தித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த சிறுமி ஊர் திரும்பி பொலிஸ் நிலையத்துக்கு சென்று மசாஜ் நிலையத்தில் தான் எதிர்கொண்ட நிலைமை தொடர்பில் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பாததால் சிறுமியின் தாய் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து பொலிஸார் சிறுமியை வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில் மற்ற யுவதியை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...