13 8
இலங்கைசெய்திகள்

வங்கி கணக்கினை ஆரம்பிக்க முடியாத இலட்சக்கணக்கான இலங்கையர்கள்

Share

வங்கி கணக்கினை ஆரம்பிக்க முடியாத இலட்சக்கணக்கான இலங்கையர்கள்

நிவாரணத்தை பெற்றுக்கொள்வதற்காக வங்கி கணக்கை ஆரம்பிக்க முடியாத நிலையில் இன்னும் ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கும் அதிகமானோர் இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

நிவாரணத்தை பெற்றுக்கொள்ள பயனாளர்கள் முதலில் வங்கிக் கணக்கை திறக்க வேண்டும். வங்கிக் கணக்கினை தொடங்க முடியாதவர்கள் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் பேர் உள்ளனர்.

அடையாள அட்டை இல்லாமையே வங்கிக்கணக்கினை திறக்க முடியாததற்கு காரணம். ஆகவே தற்போது அவர்களுக்கு நிவாரணம் கிடைக்காது.

மேலும் நிவாரணத்திட்டம் தொடர்பில் இரண்டு இலட்சம் முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், மீண்டும் தகுதியானவர்களைத் தேர்வு செய்ய மேல்முறையீட்டுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அஸ்வெசும கொடுப்பனவை கடந்த காலங்களில் பெற்றுக் கொள்ளாத குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் இருப்பின் விசாரணை நடத்தி அவர்களுக்குரிய நீதி வழங்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...