rtjy 234 scaled
இலங்கைசெய்திகள்

அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சிறுமி மரணம்

Share

அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சிறுமி மரணம்

ஹோமாகம முல்லே கிராம பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துருகிரிய பிரதேசத்தின் பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவி திடீர் சுகயீனத்தால் ஒருவல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தினிதி திமாரா என்ற 14 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி நேற்று முன்தினம்(18) காலை பாடசாலை விட்டு வீடு திரும்பிய நிலையில், சக நண்பியுடன் வீட்டிலிருந்து பாட வேலைகளை செய்துள்ளார்.

இதன்போது தாயாரிடம் சென்று கை வலிப்பதாக கூறியுள்ளார்.பின்னர் சிறுமியின் தாய் மகளின் கையில் ஒருவகை வலிநிவாரணி தைலத்தை தடவியுள்ளார்.

இதனையடுத்து மாணவி தனது பாட வேலைகளை தொடர்ந்த வேளை திடீரென வாந்தி எடுத்து தரையில் மயங்கி விழுந்துள்ளார்.

இந்நிலையில், தாயார் மகளை உடனடியாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் மகளை பரிசோதித்த வைத்தியர்கள் மகள் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...