10 18
இலங்கைசெய்திகள்

வீடொன்றின் வாகனத் தரிப்பிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மலைப்பாம்பு

Share

வீடொன்றின் வாகனத் தரிப்பிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மலைப்பாம்பு

பாணந்துறை (Panadura) – வடக்கு கோரகபால பிரதேசத்தில் வீடொன்றின் வாகனத் தரிப்பிடத்தில் இருந்து 12 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பாம்பு பாணந்துறை வடக்கு காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு பொல்கொட வனப்பகுதியில் விடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடொன்றின் வாகனத் தரிப்பிடத்தில் மலைப்பாம்பு ஒன்று இருப்பதாக பிரதேச மக்கள் பாணந்துறை வடக்கு காவல் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மலைப்பாம்பை பாதுகாப்பாகப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர், பிரதேச மக்களும் காவல்துறையினரும் இணைந்து தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் மற்றும் அட்டிய வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்தனர்.

எனனும் உரிய அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியாத காரணத்தினால் பாணந்துறை வடக்கு காவல்துறையினர் குறித்த மலைப்பாம்பை பொல்கொட வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...