24 6646d051c1437
இலங்கைசெய்திகள்

இலங்கையில் 9 பாகிஸ்தானியர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

Share

இலங்கையில் 9 பாகிஸ்தானியர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஒன்பது பாகிஸ்தானிய (Pakistan) பிரஜைகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பத்து வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்தே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதியன்று பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் இலங்கை கடற்படையினரும் இணைந்து நடத்திய சோதனையில், 581 கிலோ 34 கிராம் சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் மற்றும் 614 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருட்களை வைத்திருந்த பத்து பாகிஸ்தானிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை தண்டனையை அனுபவிக்கும் குற்றவாளிகளை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...