மின் வெட்டு
இலங்கைசெய்திகள்

நாட்டில் அடுத்த வாரம் தொடக்கம் 10 மணிநேர மின் வெட்டு?

Share

நாட்டில் அடுத்த வாரம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் காலப்பகுதியை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனச் சிங்கள ஊடகமொன்று உள்ளகத் தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் தற்போது 6 மணித்தியாலத்துக்கும் அதிகமான காலப்பகுதிக்கு மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், குறித்த காலப்பகுதியை 10 மணித்தியாலங்களாக அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனச் சிங்கள ஊடகமொன்று உள்ளகத் தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி குறித்த நடவடிக்கை அடுத்த வாரம் முதல் அமுல்படுத்தப்படும் சாத்தியம் காணப்படுகின்றது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நீர்மின் உற்பத்திக்கான பற்றாக்குறை ஆகிய காரணங்களால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...

25 67b4e515720bd
இலங்கைஅரசியல்செய்திகள்

இனவாத அழுத்தங்களுக்குக் கோழைத்தனமாக அடிபணிந்தது அரசாங்கம் – அருண் ஹேமச்சந்திரா பதவி விலக வேண்டும்! – எம்.ஏ.சுமந்திரன் ஆவேசம்

திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றும் விவகாரத்தில் அரசாங்கம் பின்வாங்கியதைக் கண்டித்து, இலங்கைத்...

images 2 6
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம், வளலாய் கடற்கரையில் பௌத்த சிலை கரையொதுங்கியது – மியன்மாரிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகம்!

யாழ்ப்பாணம், வளலாய் பகுதி கடற்கரையில் இன்றைய தினம் (நவம்பர் 17) பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை...