31
இலங்கைசெய்திகள்

அடுத்த மூன்று வருடங்களில் இலங்கைக்கு கிடைக்கவுள்ள பல மில்லியன் டொலர்!

Share

அடுத்த மூன்று வருடங்களில் இலங்கைக்கு கிடைக்கவுள்ள பல மில்லியன் டொலர்!

இலங்கைக்கு, எதிர்வரும் 2025ஆம், 2026ஆம், 2027ஆம் ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு 1,900 மில்லியன் அமெரிக்க டொலர் (57,000 கோடி) ரூபாவை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியும் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல், தேசிய கொள்கை அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவால் இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த சர்வதேச நாணய நிதியத்துடன் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி செய்துகொள்ளப்பட்ட பணியாளர் மட்டத்திலான விரிவான கடன் ஒப்பந்தத்துக்கமைய இந்த பணம் வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய சர்வதேச நாணய நிதியத்தால், 2025ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்தின் வரவு, செலவுத் திட்ட ஆவணம் தயாரிக்கப்படும் போது 700 மில்லியன் அமெரிக்க டொலர் அதாவது 21,000 கோடி ரூபா (Budgetary Support) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 2026ஆம் ஆண்டிலும் 2027ஆம் ஆண்டிலும் தலா 600 மில்லியன் அமெரிக்க டொலர் வீதம் அதாவது தலா 18,000 கோடி ரூபா வீதம் வழங்கவும் இந்த உடன்படிக்கையின் ஊடாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களினுடைய தேர்தல் விஞ்ஞாபனங்களில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தாலும், சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தங்களை பின்பற்றாவிட்டால், இலங்கை அரசாங்கம் பாரிய நிதி நெருக்கடியை எதிர் கொள்ள நேரிடுமென்று அரசாங்க நிதித்துறை ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
WhatsApp Image 2024 08 02 at 17.13.20
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பெற்றோருக்குச் சுமையற்ற, நவீன கல்வி முறை – ஜனாதிபதி அநுர குமார!

பெற்றோருக்குப் பொருளாதாரச் சுமையையும், பிள்ளைகளுக்குத் துயரத்தையும் தராத ஒரு புதிய கல்வி முறையை நாட்டில் உருவாக்கப்போவதாக...

images 2026 01 03t094503424 26244
உலகம்செய்திகள்

Grok AI-க்கு உலகளாவிய தடை மற்றும் கட்டுப்பாடுகள்: ‘டீப்ஃபேக்’ விவகாரத்தால் ஈலான் மஸ்க் பணிந்தார்!

ஈலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘Grok’ செயற்கை நுண்ணறிவுத் தளம், பெண்கள் மற்றும் சிறுவர்களின் புகைப்படங்களைத் தவறாகச்...

MediaFile 8 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி டெண்டர் ஊழல் நிறைந்தது: அமைச்சர் குமார ஜயகொடிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க சவால்!

தற்போதைய அரசாங்கத்தின் நிலக்கரி விலைமனுக் கோரலில் (Coal Tender) பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள...

1500x900 44538875 ipl2026
விளையாட்டுசெய்திகள்

ஐ.பி.எல் 2026: சின்னசுவாமி மைதானத்திலிருந்து வெளியேறுகிறது ஆர்.சி.பி! – ராஜஸ்தான் அணியும் இடம் மாறுகிறது.

ஐ.பி.எல் 2026 தொடரில் முன்னணி அணிகளான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ்...