WhatsApp Image 2022 03 17 at 8.37.13 PM
இலங்கைசெய்திகள்

வீதியில் திருத்தகம் – தாம் எந்தப்பாதையால் செல்வது!!

Share

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சண்டிலிப்பாய் – தொட்டிலடி வீதியில் கனரக வாகனத் திருத்தகம் ஒன்றினால் மக்கள் சிரமத்திற்குள்ளாகியிருக்கின்றார்கள்.

இந்த திருத்தகத்தில் பஸ்,லொறி,டிப்பர் போன்ற வாகனங்கள் திருத்தப்படுகின்றது. ஆனால் வீதியில் வைத்து இவை பழுதுபார்க்கப்படுவதால் மக்கள் பாரிய சிரமத்திற்குள்ளாகி வருகின்றார்கள்.

இதற்கு அருகில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி ,சண்டிலிப்பாய் இந்து ஆரம்ப பாடசாலை அமைந்துள்ளது. இப்பாட சாலை மாணவர்கள் உட்பட பல நூற்றுக் கணக்கானோர் அன்றாடம் இவ்வீதியினை பயன்படுத்திவருகிறார்கள்.

இவ்வீதியானது ஒடுங்கிய அகலம் குறைந்த வீதியாக காணப்படுவதால் விபத்துக்கள் ஏற்படும் ஆபத்தினை மக்கள் எதிர் நோக்கவேண்டியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயத்தில் பிரதேச சபையும் பிரதேச செயலகமும் உடனடி நடவடிக்கை எடுத்து அகற்றி பொருத்தமான இடத்திற்கு மாற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image d995b5e86f
செய்திகள்இலங்கை

அரிசி பதுக்கல்: 5,000 பொதிகள் பறிமுதல்; 6.3 மில்லியன் ரூபா வருமானம்!

சந்தையில் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி அரிசியைப் பதுக்கி வைத்திருந்த வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை...

images 9 1
செய்திகள்இலங்கை

கொழும்பு பங்குச் சந்தையில் பாரிய குழப்பம்: இன்றைய அனைத்து வர்த்தகங்களும் இரத்து!

கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) இன்றைய வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பமான சில நிமிடங்களிலேயே ஏற்பட்ட தொழில்நுட்ப...

26 695b25e4753e8
செய்திகள்உலகம்

டொரோண்டோவில் கடும் பனிப்பொழிவு எச்சரிக்கை: பாடசாலை பேருந்து சேவைகள் ரத்து; போக்குவரத்து முடக்கம்!

கனடாவின் டொரோண்டோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல மணிநேரம் நீடித்த உறைபனி மழையைத் (Freezing...

MediaFile 5 2
செய்திகள்இலங்கை

பொருளாதார மீட்சியில் முக்கிய மைல்கல்: ஜேர்மனியுடன் 188 மில்லியன் யூரோ கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் ஒரு அங்கமாக, ஜேர்மனிய கூட்டாட்சி குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையில்...