யாழ்ப்பாணம், வடமராட்சி பொலிகண்டி பகுதியில் இளம் யுவதி விபரீத முடிவால் நேற்று உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பொலிகண்டி ஆலடி பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திராசா பிரியா வயது 22 என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்தவர்.
விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்தில் இவ்வாறான தற்கொலைச் சம்பவங்கள் தொடரும் நிலையில் இவற்றிற்கான பின்னணிகள் தொடர்பில் எதுவித உறுதியான தகவல்களும் வெளிப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
#srilankaNews
Leave a comment