WhatsApp Image 2022 03 25 at 10.57.39
அரசியல்இலங்கைசெய்திகள்

வடக்கு கிழக்குக்கு விசேட நிதியம்! – ராஜபக்சக்கள் ஒப்புதல்

Share

வடக்கு கிழக்குக்கு விசேட நிதியம்! – ராஜபக்சக்கள் ஒப்புதல்

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விரைவில் விடுதலை செய்வதற்கும், வடக்கு, கிழக்கில் இராணுவ தேவைக்காக இனியும் காணிகளை கையகப்படுத்தாமல் இருப்பதற்கும் அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் முறையான விசாரணையை முன்னெடுப்பதற்கும், வடக்கு, கிழக்கின் பொருளாதார மீள் எழுச்சிக்காக விசேட நிதியமொன்றை அமைப்பதற்கும் அரச தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2022 03 25 at 10.57.40

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (25.03.2022) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

சுமார் மூன்று மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, நிபுணர்கள் குழுவினர் அறிக்கை வெளிவந்த பின்னர் அரசியல் தீர்வு பற்றி கலந்துரையாடுவதற்கும், அடுத்த சுற்று பேச்சுக்கு முன்னர் முக்கிய நான்கு விடயங்களை செயற்படுத்துவதற்கும் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

இந்த தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

சந்திப்பில் எடக்கப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பில் சுமந்திரன் எம்.பி. தெரிவித்த கருத்துகள் வருமாறு,
“ புதிய அரசமைப்புக்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் அறிக்கை, மொழிபெயர்ப்புகளுடன் இன்னும் இரு மாதங்களுக்குள் வெளிவரும் என சந்திப்பில் பங்கேற்றிருந்த வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

WhatsApp Image 2022 03 25 at 10.57.40 1

அந்த அறிக்கை வெளிவந்த பிறகு அதிகாரப்பகிர்வு உட்பட அரசியல் தீர்வு சம்பந்தமாக பேச்சு நடத்துவதற்கு இணக்கம் எட்டப்பட்டது.
எனினும், அடுத்த சுற்று பேச்சுக்கு முன்னதாக உடன் மேற்கொள்ளப்பட வேண்டிய, நான்கு விடயங்கள் சம்பந்தமாகவும் இணக்கப்பாட்டுக்கு வரப்பட்டது.

  1. பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். பயங்கரவாத தடைச்சட்டத்தின் மறுசீரமைப்பின் ஓர் அங்கமாக இவர்களின் விடுதலை இடம்பெறும்.
  2. வடக்கு, கிழக்கில் இராணுவ தேவைக்காக இனியும் காணிகள் கையகப்படுத்தப்படமாட்டா. பிரதேச செயலக எல்லைகள், மாவட்ட எல்லைகள், கரையோர எல்லைகள் ஆகியவை மாற்றப்படமாட்டா.
    அதேபோல விசேட சட்டத்தின்கீழ் காணிகள் சுவீகரிக்கப்படுவதும் நிறுத்தப்படும். அதாவது இனப்பரம்பலை மாற்றும் விதத்திலான செயற்பாடுகள் நிறுத்தப்படும்.
  3. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஒரு லட்சம் ரூபா என்பது தற்காலிகமானது, அது முழுமையான இழப்பீடு அல்ல என அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பின்னணி மற்றும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் முறையான விசாரணை முன்னெடுக்கப்படும் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
  4. போரினால் பெரிதும் பாதிக்கபபட்ட வடக்கு, கிழக்கின் பொருளாதார மீள் எழுச்சிக்காக ஒரு விசேட அபிவிருத்தி நியதியத்தை உருவாக்குவதற்கும், அதில் புலம்பெயர் மக்களின் முதலீடுகளை மேற்கொள்வதற்கு அரசு எல்லா வித நடவடிக்கைளும் மெற்கொள்ளும்.
  5. நிபுணர்கள் குழுவினர் அறிக்கை வந்த பிறகு அரசியல் தீர்வு பற்றி பேச்சுகள் ஆரம்பமாகும்.
    அரச தரப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைச்சர்களான சமல் ராஜபக்ச, ஜி.எல். பீரிஸ், அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டமைப்பின் சார்பில் ரெலோ எம்.பிக்களைத்தவிர ஏனையோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...