tamilni Recovered 6 scaled
இலங்கைசெய்திகள்

யாழ் இளைஞனிடம் பாரிய பண மோசடி : பிரித்தானிய புலம்பெயர் தமிழர் அதிரடியாக கைது

Share

யாழ் இளைஞனிடம் பாரிய பண மோசடி : பிரித்தானிய புலம்பெயர் தமிழர் அதிரடியாக கைது

பிரித்தானியாவில் (UK) வேலை பெற்றுத் தருவதாக கூறி யாழ்ப்பாண (Jaffna) இளைஞன் ஒருவரிடம் பண மோசடி செய்த குற்றச்சாட்டில் புலம்பெயர் தமிழர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தவகையில், கைதான நபர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தவேளை, லண்டனில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் வேலை பெற்றுத் தருவதாக கூறி இளைஞனிடம் 80 இலட்சம் ரூபாய் பணத்தினை பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் தெரியவருகையில், பணத்தை பெற்றுக்கொண்ட சந்தேக நபர், இளைஞரை லண்டனுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்காததால், சந்தேகம் கொண்ட இளைஞன் தனது பணத்தை மீள தருமாறு கோரியுள்ளார்.

எனினும், அந்த லண்டன் பிரஜை பணத்தை திருப்பித் தராததால் இளைஞன் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, காவல்துறையினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக, வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்றவர்கள் வெளிநாடுகளில் வேலை பெற்றுத் தருவதாக யாழ்ப்பாண இளைஞர்கள், யுவதிகளை இலக்கு வைத்து பண மோசடியில் ஈடுபட்டுவரும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மேலும், இது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறும் காவல்துறையினர் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...