val
இலங்கைசெய்திகள்

யாழில் வாள்வெட்டு: மூவர் படுகாயம்!!

Share

யாழில் வாள்வெட்டு: மூவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம், பாசையூரில் நேற்று (22) மாலை நடந்த வாள் வெட்டுச் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

குருநகர் கடற்கரை வீதியில் உள்ள திருச்சிலுவை வைத்தியசாலைக்கு அருகே இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரை, மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த நால்வர் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கானவர்களும், தாக்குதல் நடத்தியவர்களும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மூவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...