யாழில் மேலும் ஐவர் கொரோனாத் தொற்றால் உயிரிழப்பு!!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஐவர் கொரோனாத் தொற்றால் உயிரிந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கைதடியைச் சேர்ந்த 78 வயதுப் பெண் ஒருவர் கொரோனாத் தொற்றால் இறந்துள்ளார்.
கொழும்புத்துறையைச் சேர்ந்த79 வயதுடைய ஒருவரும், புத்தூரைச் சேர்ந்த 75 வயது ஆண் ஒருவரும், ஏழாலை – மயிலங்காட்டைச் சேர்ந்த 69 வயது ஆண் ஒருவரும், கோண்டாவிலைச் சேர்ந்த 48 வயது ஒருவரும் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரை 176 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
Leave a comment