வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற மரண வீட்டுக்கு சென்ற முதியவர் அதீத வெயில் காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் குடாவேம்படி சுன்னாகம் பகுதியை சேர்ந்த நாகன் தேவராஜா வயது 63 என பொலிசார் தெரிவித்தனர்.
இவர் வட்டுகோட்டை கல்லூரி வீதியில் இடம் பெற்ற மரண வீட்டுக்கு சென்ற நிலையில் அங்கு மயங்கி விழுந்துள்ளார்.
இறப்பு விசாரணைகளை வலிகாமம் கிழக்கு திடிர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews