1986 ஆம் ஆண்டு மண்டைதீவு கடலில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் உட்பட்ட 32 குருநகர் கடற்றொழிலாளர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) அஞ்சலி செலுத்தியுள்ளார்.
1986 ஆம் ஆண்டு ஜீன் 10 ஆம் திகதி மண்டைதீவு கடலில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் உட்பட்ட 32 குருநகர் கடற்றொழிலாளர்கள் உயிரிழந்திருந்தனர்.
இந்தநிலையில் குறித்த நினைவிடத்திற்கு சென்ற ஈபிடிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலியை செலுத்தினார்.