கண்டி – குகாகொட வீதியில் மண்சரிவு காரணமாக குவிந்திருந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி – குகாகொட வீதியில் மண்சரிவு ஏற்பட்ட பகுதி. நேற்று (டிசம்பர் 14) வீதியில் மண் மற்றும் கற்களை அகற்றிக் கொண்டிருந்த ஊழியருக்கும், அந்த வீதியில் பயணித்த லொறி ஒன்றிலிருந்த ஒருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது லொறியிலிருந்த நபரால் ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்றை ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவேற்றியிருந்ததுடன், அவ்வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வைரலாகியது.
கைது: தாக்குதல் தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமையவே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (டிசம்பர் 14) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

