2 28
இலங்கைசெய்திகள்

பாணின் விலை தொடர்பில் பேக்கரி உரிமையாளர்கள் முன்வைத்த கோரிக்கை!

Share

பாணின் விலை தொடர்பில் பேக்கரி உரிமையாளர்கள் முன்வைத்த கோரிக்கை!

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 25ரூபாவினால் குறைக்கப்பட்டால், பாண் ஒன்றினை 100 ரூபாய்க்கு நுகர்வோருக்கு வழங்க முடியும் என அகில  இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் நேற்று முன்தினம் (13) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த கலந்துரையாடலில் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்ததாவது,“டொலரின் மதிப்பு குறைந்திருந்தாலும், ஒரு கிலோ கோதுமை மாவை 190 ரூபாய்க்கு வாங்க வேண்டியுள்ளது.

கோதுமை மாவு இறக்குமதிக்கு கிலோவுக்கு விதிக்கப்படும் ரூ.45 வரியைக் குறைத்து, கோதுமை மாவை இறக்குமதி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டால், நிறுவனங்களின் ஏகபோகம் உடைக்கப்படும்.

மேலும், உலக சந்தையில் ஒரு கிலோ வெண்ணெயின் விலை ரூ. 400 ஆக இருந்தாலும், உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ வெண்ணெயின் ரூ. 900 க்கு விற்கப்படுகிறது.

அத்துடன், வெண்ணெயின் மீது விதிக்கப்படும் கிலோவிற்கு 600 ரூபா என்ற வரி குறைக்கப்பதுடன் யார் வேண்டுமானாலும் வெண்ணெயை இறக்குமதி செய்ய அனுமதித்தால், அரசாங்கத்திற்கு அதிக வரி வருவாய் கிடைக்கும்.

இவை சாத்தியமாகுமானால் பேக்கரி பொருட்களின் விலைகளைக் குறைக்க முடியும்.

இதேவேளை, பாணின் விலை உயர்வு காரணமாக பாண் நுகர்வு குறைந்துள்ளது.” என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பேக்கரி உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கோதுமை மாவு மற்றும் வெண்ணெய் இறக்குமதியாளர்களை அழைத்து கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...