செய்திகள்இலங்கை

பயணத் தடையை மீறுவோர் கைதாவர்- அஜித் ரோகண எச்சரிக்கை!!

Share
IMG 20210813 WA0043
Share

பயணத் தடையை மீறுவோர் கைதாவர்- அஜித் ரோகண எச்சரிக்கை!!

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறுபவர்கள் கைதுசெய்யப்படுவார்களென பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர்கள் பயணிக்கும் வாகனங்களும் கையகப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில இடங்களில் மாகாண எல்லைகள் வரையில், பேருந்துகளில் பயணித்து, பின்னர் அங்கிருந்து நடைபாதையாக சென்று, வேறு பேருந்துகளின் மூலம் சிலர் பயணிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அவ்வாறு பயணிக்கும் பேருந்தின் உரிமையாளர், சாரதி, நடத்துநர் உட்பட சம்பந்தப்பட்டவர்களுடன் குறித்த பேருந்தும் கையகப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 253 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அனுமதியின்றி மாகாண எல்லைகளை கடக்க முற்பட்ட 361 வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...