கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர் நீதிமன்றம் இருவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சுமார் 15 ஆண்டுகள் நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ருசிரா வெலிவத்த இன்று அறிவித்தார்.
முதல் குற்றவாளியான வஹும்புரகே திலக் புஷ்ப குமார மற்றும் இரண்டாம் குற்றவாளியான வீரதுங்க சமிந்த ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

