tamilni 47 scaled
இலங்கைசெய்திகள்

பதவி விலகிய மஹேல ஜயவர்தன

Share

பதவி விலகிய மஹேல ஜயவர்தன

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோகராக கடமையாற்றிய முன்னாள் நட்சத்திர வீரர் மஹேல ஜயவர்தன(Mahela Jayawardene) பதவி விலகியுள்ளார்.

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தாம் பதவி விலகுவதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளது.

மஹேல ஜயவர்தனவின் பதவிக் காலத்தில் இலங்கை கிரிக்கெட் துறையில் பல்வேறு அடிப்படை மாற்றங்களை மேற்கொண்டதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

மேலும், மஹேல ஜயவர்தனவின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை கூறியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி அண்மைய போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. குறிப்பாக அண்மையில் உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரின் முதல் சுற்றிலேயே இலங்கை வெளியேறியமை பல்வேறு மட்டங்களிலும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது.

இந்த நிலையில் மஹேல ஜயவர்தன தனது பதவி விலகல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...