88 300x200 1
இலங்கைசெய்திகள்

பண்டாரநாயக்காவுக்கு ஒரு சட்டம் திலீபனுக்கு ஒரு சட்டமா?

Share

தியாக தீபம் திலீபனுக்கு தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார விதிமீறல். ஆனால் பண்டாரநாயக்காவுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார நடைமுறையா?

இதுதான் அரசின் இனநல்லிணக்கத்தின் வெளிப்பாடா? அனைவரும் ஒற்றுமையாக தேசத்தை கட்டியெழுப்புவோம் என ஜனாதிபதி ஐ.நாவின் உரையில் ஒற்றுமை வெளிப்படுகின்றதா? இதுதான் அரசின் இனரீதியான அணுகுமுறையா?

இவ்வாறு வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கேள்வியெழுப்பியுள்ளார்.

தியாகதீபம் திலீபனின் 34வது தினம் கடைப்பிடிக்க அவரின் சிலைக்கு அண்மையில்கூட செல்ல முடியாது தடுக்கப்பட்டோம்.

அஞ்சலி செலுத்தியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறினார் எனும் குற்றச்சாட்டில் காட்டுமிராண்டித்தனமாக கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அத்துடன் இராணுவத்தினரும் பொலிஸார் நினைவுகூர்தலுக்கு தடைகளை ஏற்படுத்தினர்.

ஆனால் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் 62வது நினைவுதினம் பெருமளவானோரின் பங்குபற்றுதலுடன் பண்டாரநாயக்க சமாதியில் இடம்பெற்றுள்ளது.

இதில் முன்னாள் ஜனாதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசின் பங்காளிக் கட்சியினர் எனப் பெருமளவானோரின் பிரசன்னத்துடன் தடைகள் இன்றி அஞ்சலி நடைபெற்றுள்ளது.

அவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இறந்தவர்களை அஞ்சலிப்பதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் தமிழர்களின் நினைகூரலை மாத்திரம் தடுக்கின்றது என்பதே எமது பிரச்சினை.

தனிமைப்படுத்தல் சட்டத்தை தமக்குப் பிடிக்காத விடயங்களுக்கு அரசு பயன்படுத்துகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

88

6666

தொடர்புடைய செய்தி:

பண்டாரநாயக்கவின் நினைவு தினம் இன்று!

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...