நல்லூரில் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல்!!
நல்லூர் ஆலய வளாகத்தில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பித்த நிலையில் நல்லூர் ஆலயத்திற்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட அடியார்கள் மாத்திரமே அனுமதிக்கப்பட்டனர்.
நல்லூர் ஆலய முன்வாசலில் கோயில் நிர்வாகத்தினரின் உத்தரவில் பொலிஸாரின் பஸ் நிறுத்தப்பட்டிருந்தது.
பொதுமக்கள் கொடியேற்றத்தை பார்க்காதவாறு பஸ்ஸை நிறுத்தி தடைசெய்யப்பட்டுள்ளது எனக் கூறி, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
Leave a comment