இலங்கைசெய்திகள்

துரோகம் இழைத்தவர்களுக்கு பொதுத்தேர்தல் மூலம் பழி தீர்க்கும் மொட்டு

Share
5
Share

துரோகம் இழைத்தவர்களுக்கு பொதுத்தேர்தல் மூலம் பழி தீர்க்கும் மொட்டு

ஜனாதிபதி தேர்தலில் கட்சிக்கு துரோகம் இழைத்த எவருக்கும் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட சிறிலங்கா பொதுஜன பெரமுன வேட்புமனுக்களை வழங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் (Sagara Kariyawasam) கொழும்பில் (Colombo) இன்று (30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவித்ததாவது, எங்கள் கட்சிக்கு துரோகம் இழைத்த ஒரு பிரிவினர் உள்ளனர்.அந்த பிரிவினரின் அரசியல் நிலவரம் பற்றி நான் பேச விரும்பவில்லை.

கட்சிக்கு துரோகம் செய்த யாருக்கும் மீண்டும் கட்சியில் உயர்பதவிகளோ, வேட்புமனுவோ வழங்கப்படமாட்டாது, அவர்களை ஏற்க மாட்டோம்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி, இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் மொட்டு சின்னத்தில் போட்டியிடும். என்றார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...