செய்திகள்இலங்கை

செஞ்சோலை நினைவேந்தலுக்கு இராணுவத்தினர் தடை!!

Share
IMG 5141
Share

செஞ்சோலை நினைவேந்தலுக்கு இராணுவத்தினர் தடை!!

முல்லைத்தீவு செஞ்சோலை பகுதியில் 2006 ஆம் ஆண்டு விமானப் படையினரின் தாக்குதலில் உயிரிழந்த சிறார்களை நினைவுகூரச் சென்ற பெற்றோர் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு செஞ்சோலை பகுதியில் 2006 ஆம் ஆண்டு இதேநாள் இலங்கை விமானப் படை நடத்திய தாக்குதலில் 54 மாணவிகள் உட்பட 61 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், செஞ்சோலை வளாகத்துக்குச் சென்ற பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இன்று காலை செஞ்சோலை வளாகத்துக்கு செல்லும் வள்ளிபுனம் இடைக்கட்டு வீதி முழுவதும் இராணுவம், பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டிருந்தன.

பூக்கள், மாலைகளோடு அஞ்சலி செலுத்த வந்த பெற்றோர் ஏமாற்றத்துடன் திருப்பி்ச் சென்றுள்ளனர். அந்த வீதியால் செல்பவர்கள் பொலிஸார், இராணுவத்தினரால் விசாரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...