15 8
இலங்கைசெய்திகள்

சீன எல்லையை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

Share

சீன எல்லையை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்க

சீன (China) எல்லைப் பகுதியில் அமைந்துள்ள திபெத்தை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 95 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

அத்துடன் நிலநடுக்கதத்தால் 130 பேர் காயமடைந்ததாக சீனா (China) அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கமானது திபெத்தில் உள்ள நகரமான ஷிகாட்சேயில் இன்று (7.1.2024) காலை உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

7.1 ரிக்டர் அளவில் மேற்பரப்புக்கு கீழே 10 கிலோமீட்டர் (சுமார் ஆறு மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வின் தரவுகளின்படி, நிலநடுக்கத்திற்கு பிறகு சிறிய நிலநடுக்கங்களும் ஏற்பட்டுள்ளதோடு, அண்டை நாடான நேபாளம் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளிலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

இடிபாடுகளுக்கு மத்தியில் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணியில் சுமார் 1500 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவசரகால மேலாண்மை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 1 1
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பெண் விளக்கமறியலில்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்குத் தங்குமிட வசதிகளை...

25 68f4c824ac515
செய்திகள்இலங்கை

ராகம, படுவத்தை பேருந்து விபத்து: 9 மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்!

ராகம, படுவத்தை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒன்பது மாணவர்கள் உட்பட மொத்தம் 12 பேர்...

Landslide Warning 1200px 22 12 25 1000x600 1
செய்திகள்இலங்கை

இலங்கையில் மழை மேலும் அதிகரிக்கும்: 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

எதிர்வரும் அக்டோபர் 21ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல்...

25 68efb833da4d2
செய்திகள்இலங்கை

காவல்துறை அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு: விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரங்கள்

தேசிய காவல்துறை திணைக்களத்தில் உயர் பதவி முதல் பல்வேறு பதவிகளில் உள்ள அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்...