காலி தெவட சந்தியில் பாரிய தீ விபத்து: பிரதான வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

image 2304b844b3

காலி, தெவட சந்தியில் அமைந்துள்ள பழைய உலோகப் பொருட்களைச் சேகரிக்கும் கடையொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக காலி மாநகர சபையின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

தீயணைப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீ ஏனைய பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீ விபத்து மற்றும் தீயணைப்புப் பணிகாரணமாக காலி – மாத்தறை பிரதான வீதியில் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தத் தீ விபத்திற்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் குறித்த மேலதிக விசாரணைகளை காலி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Exit mobile version