17
இலங்கைசெய்திகள்

ஒருங்கிணைப்பு கூட்டங்களில் தனிமனித தாக்குதல்கள் : சாடும் சிறீதரன்

Share

ஒருங்கிணைப்பு கூட்டங்களில் தனிமனித தாக்குதல்கள் : சாடும் சிறீதரன்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் மக்கள் நலன் சார்ந்த எந்தவொரு தீர்க்கமான முடிவும் எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Shritharan) தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டங்கள் கடந்த காலங்களிலும் நடைபெற்றது தான் ஆனால் இப்போது தான் புதிதாக நடைபெறுவது போல காண்பிக்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களில் இருக்கின்ற அரச உத்தியோகத்தர்கள், அதிகாரிகள் வினைத்திறனற்றவர்கள் என்பது போல காண்பிக்க முனைவதுடன் அவர்களைப் பிழையானவர்களாக காட்டிக்கொள்வதுடன் அவர்கள் மீது குற்றங்களை சுமத்திக் கொள்ளப்படுகின்றது.

மேலும் இந்தக் கூட்டங்களில் தனிமனித தாக்குதல்கள் தான் அங்கே அதிகம் இடம்பெறுகின்றன. அதாவது வைத்தியர் சத்தியமூர்த்தி (T.Sathiyamoorthy) மற்றும் அரச உத்தியோகத்தர்கள் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக தாக்குதல்களை நிகழ்த்துகின்றனர்.

பொதுவான அபிவிருத்தி தொடர்பான பேச்சுக்கள் அங்கு முன்வைக்கப்படாமல் குழப்பங்களை ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகளைப் பற்றியே பேசுகின்றனர்.” என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...