tamilni Recovered 3 scaled
இலங்கைசெய்திகள்

ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு கிடைத்துள்ள மில்லியன் டொலர் வருமானம்

Share

ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு கிடைத்துள்ள மில்லியன் டொலர் வருமானம்

இலங்கைக்கு (Sri Lanka) தெங்கு உற்பத்தி சார்ந்த பொருட்களின் ஏற்றுமதியில் 330 மில்லியன் டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் (Coconut Development Authority) தலைவர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் தெங்கு உற்பத்தி சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 20% அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், தென்னையிலிருந்து பெறப்படும் பொருட்களிலிருந்து தேங்காய் எண்ணை உற்பத்தி மற்றும் அழகுசாதன உற்பத்திகள் போன்றவற்றுக்கு சர்வதேச சந்தையில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக சபையின் தலைவர் ரொஷான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் (Sri Lanka) பெறுமதி சேர் வரி (VAT) வருமானம் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு (Ministry of Finance) தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2023ஆம் ஆண்டில் வரி வருமானம் 50 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், 2023 ஆம் ஆண்டில் பெறுமதி சேர் வரி மூலம் 694.5 பில்லியன் ரூபா கிடைத்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...