3 43
இலங்கைசெய்திகள்

என்னதான் நடக்கிறது தமிழரசுவில்…..!

Share

என்னதான் நடக்கிறது தமிழரசுவில்…..!

இலங்கை தமிழரசுக்கட்சி இப்போது எல்லா வகையிலும் குழப்பத்தின் உச்சியில் நிற்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.தாமும் குழம்பி மக்களையும் குழப்பி அவர்களை நம்பித்திரிகின்ற தொண்டர்களையும் குழப்பி இறுதியில் குழப்பத்தின் உச்சியில் நிற்கிறது தமிழரசு.

அந்தக்கட்சிக்கு யார் தலைவர் எனறே தெரியவில்லை.அத்துடன் அந்தக்கட்சியின் பேச்சாளரும் யாரென்று தெரியவில்லை.

தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக செயலாளருக்கு கடிதம் அனுப்பிவிட்டு மீண்டும் தானே தலைவர் என அடம் பிடிக்கிறார் மாவை சேனாதிராஜா.

புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட சிறீதரனோ விழி பிதுங்கி செய்வதறியாது திகைத்து போய் நிற்கிறார்.

இப்போது ஒரு புதிய தலைவர் சிவிகே சிவஞானம். என்னதான் நடக்கிறது பழம்பெரும் கட்சி என சொல்லப்படுகின்ற தமிழரசுவில்.

வவுனியாவில் இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் இடை பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், பதில் தலைவராக சிவஞானமும் அரசியல் குழு தலைவராக மாவை சேனாதிராஜாவும் செயற்படுவார்கள் என்றார்.

ஆனால் கட்சியின் ஊடகப்பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன், மாவை சேனாதிராஜா தமிழரசுக்கட்சியின் பெருந்தலைவர் என்கிறார்.

இவர்கள் சொல்வதை பார்க்கும்,கேட்கும்போது தலை சுற்றுகிறது என்கிறது வெகுஜனம். இவர்களின் இந்த கூத்துக்களால் தான் யாழ்ப்பாணத்தவர்கள் அநுர பக்கம் சாய்ந்தனரோ என ஒருவர் கேட்பதுவும் சரிபோலத்தான் படுகிறது.

 

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...