3 43
இலங்கைசெய்திகள்

என்னதான் நடக்கிறது தமிழரசுவில்…..!

Share

என்னதான் நடக்கிறது தமிழரசுவில்…..!

இலங்கை தமிழரசுக்கட்சி இப்போது எல்லா வகையிலும் குழப்பத்தின் உச்சியில் நிற்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.தாமும் குழம்பி மக்களையும் குழப்பி அவர்களை நம்பித்திரிகின்ற தொண்டர்களையும் குழப்பி இறுதியில் குழப்பத்தின் உச்சியில் நிற்கிறது தமிழரசு.

அந்தக்கட்சிக்கு யார் தலைவர் எனறே தெரியவில்லை.அத்துடன் அந்தக்கட்சியின் பேச்சாளரும் யாரென்று தெரியவில்லை.

தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக செயலாளருக்கு கடிதம் அனுப்பிவிட்டு மீண்டும் தானே தலைவர் என அடம் பிடிக்கிறார் மாவை சேனாதிராஜா.

புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட சிறீதரனோ விழி பிதுங்கி செய்வதறியாது திகைத்து போய் நிற்கிறார்.

இப்போது ஒரு புதிய தலைவர் சிவிகே சிவஞானம். என்னதான் நடக்கிறது பழம்பெரும் கட்சி என சொல்லப்படுகின்ற தமிழரசுவில்.

வவுனியாவில் இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் இடை பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், பதில் தலைவராக சிவஞானமும் அரசியல் குழு தலைவராக மாவை சேனாதிராஜாவும் செயற்படுவார்கள் என்றார்.

ஆனால் கட்சியின் ஊடகப்பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன், மாவை சேனாதிராஜா தமிழரசுக்கட்சியின் பெருந்தலைவர் என்கிறார்.

இவர்கள் சொல்வதை பார்க்கும்,கேட்கும்போது தலை சுற்றுகிறது என்கிறது வெகுஜனம். இவர்களின் இந்த கூத்துக்களால் தான் யாழ்ப்பாணத்தவர்கள் அநுர பக்கம் சாய்ந்தனரோ என ஒருவர் கேட்பதுவும் சரிபோலத்தான் படுகிறது.

 

Share
தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...