எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

sajith premadasa

எதிர்க்கட்சித் தலைவர் (Opposition Leader) சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றில் கையெழுத்திட்டனர்.

குறித்த நம்பிக்கையில்லா தீர்மானமானது, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக கொண்டுவர எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழு இன்று தீர்மானித்தது.

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட அமைதியின்மையின் காரணமாக உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பான தனது கடமையையும் பொறுப்பையும் நிறைவேற்றத் தவறியமைக்காக இந்த நம்பிக்கையில்லா தீர்மானமானது கொண்டுவரப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

 

Exit mobile version