செய்திகள்இலங்கை

ஊரடங்கை மீறிவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி பணிப்பு!!

Share
download 4
Share

ஊரடங்கை மீறிவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி பணிப்பு!!

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பொலிஸ்மா அதிபருக்கு பணித்துள்ளார்.

நாடு முழுவதும் நேற்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தேசிய கொரோனாக் கட்டுப்பாட்டுச் செயலணியின் சிறப்புச் சந்திப்பில் ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

மேலும், இதுவரை கொரோனாத் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. செப்ரெம்பர் முதலாம் திகதிக்கு முன்னர் இவர்களுக்கு தடுப்பூசி ஏற்ற வேண்டும் என்று ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

பிரதேச செயலாளர், உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் கிராமப்புற கொரோனாக் கட்டுப்பாட்டுக் குழுக்கள் என்பவை இணைந்து தடுப்பூசி ஏற்றாதவர்களை அடையாளம் கண்டு, தடுப்பூசிக்கு எதிர்வரும் திங்கட்கிழமை 23ஆம் திகதிக்கு முன்னர் சுகாதாரப் பிரிவுக்கு அறிக்கை வழங்க பணிக்கப்பட்டுள்ளது.

1906 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அல்லது தேசிய கொரோனாக் கட்டுப்பாட்டுச் செயலணிக்கு அழைப்பதன் மூலமும் தடுப்பூசி பற்றுக்கொள்வதற்கு பதிவுசெய்ய முடியும்.

இந்தத் தடுப்பூசித் திட்டத்தை இராணுவத் தளபதியின் மேற்பார்வையின் கீழ், சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களின் படி மேற்கொள்வது என்றும் இந்த கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...