22 15
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : அரசாங்கத்திற்கு மல்கம் ரஞ்சித் விடுத்துள்ள கோரிக்கை

Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : அரசாங்கத்திற்கு மல்கம் ரஞ்சித் விடுத்துள்ள கோரிக்கை

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையை வெளிக்கொணர்வதன் மூலம் தற்போதைய அரசாங்கம் நீதியை நிலைநாட்டும் என்பதில் நம்பிக்கையுடன் இருப்பதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் (Malcolm Ranjith) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அரசாங்கம் அவ்வப்போது எங்களுக்குத் தெரிவிக்கின்றது.

அரசு, படுகொலை குறித்து வெளிப்படையான விசாரணையை மேற்கொள்வதாகத் தெரிகிறது.

விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அவர்கள் எங்களுடன் நடத்திய உரையாடல்களிலிருந்து இது தெளிவாகிறது எனவே, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake), பதவியேற்றவுடன், கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு விஜயம் செய்து அங்கு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்து புதிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...