உச்சத்தை தொடும் மின்கட்டணம்!!!

AFDB Donates 83.6m for Ethiopia Djibouti Electricity Trade

மின்கட்டணம் பல மடங்களாக அதிகரிக்கக்கூடும் என தகவல் கிடைத்துள்ளது – என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 2 ஆயிரத்து 180 ரூபாவாக இருந்த சமையல் எரிவாயுவின் விலை, 4 ஆயிரம் ரூபாவரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை பார்க்கும்போது தலை சுற்றுகின்றது.

இந்நிலையில் இன்னும் ஒரிரு நாட்களில் மின்சார கட்டணமும் அதிகரிக்கப்படலாம். எமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, 30 அலகுகளுக்கான மின் கட்டணத்தை தற்போதுள்ள விலையைவிடவும் 500 மடங்களால் அதிகரிக்குமாறு மின்சார சபை யோசனை முன்வைத்துள்ளது. எனவே, மின்குமிழ்களை வெறுமனே பார்த்துகொண்டிருக்க வேண்டிய நிலையே ஏற்படும்.

இந்நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என்றார்.

#SriLankaNews

Exit mobile version