இலங்கைசெய்திகள்

இலங்கை வந்த விமானத்தில் பிரித்தானிய பிரஜை செய்த காரியம்

Share
27 1
Share

இலங்கை வந்த விமானத்தில் பிரித்தானிய பிரஜை செய்த காரியம்

சிட்னியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானமொன்றில் அவசர கதவை திறக்க முயற்சித்த பிரித்தானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டு இன்று (02) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

சிட்னியில் இருந்து கட்டுநாயக்க வந்த பிறகு அமெரிக்க நோக்கி பயணிக்கவிருந்த விமானமொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விமானத்தின் பாதுகாப்பு பெல்ட்களை பயன்படுத்தி இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட அவர், கட்டுநாயக்ககாவல்துறையினர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், கொழும்பு அளுத்கடே பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் 25,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேக நபர் குடிபோதையில் இருந்தமையால், அவசர கதவை திறக்க முயற்சித்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சந்தேகநபரான பெவன் கிறிஸ்டி ஸ்காட் என்ற பிரித்தானிய பிரஜை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...