இலங்கை தபால் கட்டணங்கள் உயர்வு: நாளை முதல் புதிய விலைகள் அமல்!

image a246ed7ab7

உள்நாட்டு தபால் கட்டணங்கள் திங்கட்கிழமை (09)  முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக,  அஞ்சல்  மா அதிபர் ருவன் சத்குமார  அறிவித்துள்ளார்.

இதற்கமைய சாதாரண தபால் கட்டணம் 70 ரூபாயாகவும், பதிவுத் தபால் கட்டணம் 130 ரூபாயாகவும் ஆரம்ப நிறை 20 கிராமில் இருந்து 30 கிராம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.  புதிய நிர்ணயிக்கப்பட்ட தபால் அட்டைக்கான விலை 40 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், 250 கிராம் உள்நாட்டுச்  சாதாரண  பொதிகள் சேவைக்கான ஆரம்ப கட்டணம் 150 ரூபாயாகவும், விரைவு ‘கூரியர்’ சேவைக்கான திருத்தப்படு குறைந்தபட்ச கட்டணம்  200 ரூபாயாகும்  30 கிராம் வரையான அச்சிடப்பட்ட பக்கெட்டுகள் அல்லது கடிதங்களுக்கான கட்டணம்  45 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அதிகரிக்கப்படும் சாதாரண கடிதங்கள் மற்றும் பொதிகளுக்கான கட்டணங்கள்  ஒவ்வொரு 10 கிராமுக்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது

 

 

Exit mobile version