2 7
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி

Share

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி(narendra modi) எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு (sri lanka) பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக இலங்கை வட்டார தகவல்களின்படி, இந்தப் பயணம் இன்னும் வலுவடைந்து வருவதாகவும், ஏப்ரல் 5 ஆம் திகதி அளவில் பயணம் இடம்பெறக்கூடும் என்றும், இணைப்பு மற்றும் பொருளாதார உறவுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் மோடியின் பயணத்திற்கான அழைப்பை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(anura kumara dissanayake) 2024 டிசம்பர் நடுப்பகுதியில் புதுடில்லிக்கு மேற்கொண்ட இரண்டு நாள் பயணத்தின் போது விடுத்திருந்தார்.

2024 செப்டம்பரில் அநுர குமார, ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அவரின் முதல் வெளிநாட்டுப் பயணம் இந்தியாவாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பயணத்தின் போது, ஏழு கடன் திட்டங்களுக்கான 20 மில்லியன் டொலர் கொடுப்பனவுகளை மானியங்களாக மாற்றுவதாக இந்திய அரசாங்கம் அறிவித்தது, இது இலங்கையின் கடன் சுமையைக் குறைத்தது.

2022 ஆம் ஆண்டு நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது டில்லி கொழும்புக்கு அளித்த 4 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆதரவை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...